Pages

Monday, May 23, 2016

சுப்பிரமணிய பாரதியின் சிந்தனைகள் ...

சுப்பிரமணிய பாரதியின் சிந்தனைகள் ...



·                     
o   மற்றவர்களின் உள்ளத்தில் உங்களைப் பற்றிய பொய்யான மதிப்பை    
     உண்டாக்க முயற்சிக்காதீர்கள்.இதனால் பல இடங்களில்  
     அவமானப்படலாம்.

o   கேட்டவுடன் உலகில் எதுவும் கிடைப்பதில்லை. பக்திக்கும் இது  
     பொருந்தும். பக்குவமடைந்த பிறகே கேட்ட வரம் கிடைக்கும். இதற்கு பல 
     காலம் பொறுக்கவேண்டும்

o    பக்தி அதிகரிக்க அதிகரிக்க மனோபலம் அதிகரிக்கும். அப்படிப்பட்டவன் 
      இந்த பிறப்பிலேயே தெய்வ நிலைக்கு உயர்ந்து விடுவான். கலி உலகக்  
      கோட்பாடு

o    வீட்டில் தெய்வத்தைக் காணும் திறமை இல்லாதவன்,   
       மலைச்சிகரத்திற்குச்  சென்று குகையில் அமர்ந்து தவம் செய்தாலும்   
      கடவுள் தரிசனத்தைப் பெற முடியாது.

o   தனிமையை விரும்பியோ, மந்திரம் ஜெபித்தோ, யோகபயிற்சியில் 
     ஈடுபட்டோ உலகத்தை விட்டு விலக முயற்சிக்க வேண்டாம். உலக 
     விஷயங்களில் ஈடுபட்டுக் கொண்டே மனதை ஒருநிலைப் படுத்துவதே 
      பயனுடைய செயல்.
o   துன்பம் நேரும்போது துணிச்சல் என்னும் கடிவாளத்தால் கட்டி 
     மனக்குதிரையைப் பிடித்து நிறுத்த வேண்டும். இதுவே சரியான 
     யோகப்பயிற்சி.

No comments:

Post a Comment