Pages

Monday, May 14, 2012

பிரிவு உபசார விழா:





   ஒவ்வொரு கல்லூரியிலும் விடைபெறு விழா என்பது நடத்தப்பட வேண்டிய

ஒன்றாகும் .அது தான் முதலாமாண்டு மாணவர்களுக்கு சிறப்பு கடமையும்

கூட .அந்த வகையில் நான் பயிலும் பெரியார் பல்கலைக்கழகம் சேலம் -11

தமிழ்த் துறையில் விடை பெறு விழாவானது 10 .04 .2012 செவ்வாய்க்கிழமை

அன்று முதலாமாண்டு மாணவர்களாகிய நாங்கள் தலைமை நண்பர்களுக்கு

நடத்தினோம் .விழாவில் தொடக்கமாக

     தமிழ்த்தாய் வாழ்த்து:

    முதலாமாண்டு மாணவிகள்

                      ப.சத்யா ,
                     சி.சசிகலா

 தொகுப்புரை :
          
         விழாவில் முதலாமாண்டு மாணவனாகிய நான் [மு. சதீஷ்குமார்] ஒரு

        சிறு கவிதையின்  மூலம் வெளிப்படித்தினேன்.

பிரிவு

"பிரிவு என்பது
நிரந்திரமில்லை !
பிரிவு இல்லாமல்
வாழ்கை இல்லை !
பிரிவு என்பதே ஓர்
சந்திப்பிற்க்குத்தான்.
பிரிவு என்பது
உண்மையில் பிரிவே இல்லை .
பிரிவுதான் நம் வாழ்வின்
அடுத்த கட்டத்திற்கு
செல்லும் பாதை .  "

வரவேற்புரை :

            முதலாமாண்டு மாணவர் தே.பாரதி  அவர்கள் வரவேற்புரை வகுத்தார் .

சிறப்புரை :

      இவ் விழாவிற்கு எங்கள் ஆசான் தமிழ்த்துறைத் தலைவர்

      முனைவர் :பெ.மாதையன் அய்யா அவர்கள் சிறப்புரை வகுத்தார் .

அவர் பேசிய பொது எடுத்த படம்  :




இவ் விழாவில் எங்கள் துறை பேராசிரியர்கள் :

தி .பெரியசாமி
வை .இராமராஜபண்டியன்
சு .வேலாயுதன்
க .மைதிலி
இரா.வசந்தமாலை

போன்றோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

விழாவில் கலந்து கொண்ட மாணவர்கள் :



மாணவர்களின் கருத்துரை :

முதலாமண்டு மாணவர்கள் தம் நன்றியினை தெரிவித்தும் கவிதை ,பாடல் ,பேச்சு ,போன்ற வகையில் வெளிப்படித்தினர் .

அவர்களின் பெயர்கள் வருமாறு :

பெ .மகேஸ்வரி
ஜெ,மாமல்லன் (கவிதை )
கிருஷ்ணவேணி  (கவிதை )
போன்றோர் .

ஏற்புரை வழங்குதல்:

இதனை தொடர்ந்து மாணவர்கள் பங்களிப்பில் தலைமை நண்பர்கள் ஏற்புரை வகுத்தனர் ஒவொருவரும் தம் உள்ளார்ந்த நினைவுகளையும் ,நன்றியினையும் தெரிவித்தனர் .

குறிப்பிடத்தக்கவர்கள் :

ம .விசுவநாதன்
ர .ராதிகா
கி .வசந்தக்குமார்
ரா.கெஜலக்ஷ்மி



நன்றியுரை :

விழாவின் இறுதியாக முதலாமாண்டு மாணவர் s .தினேஷ்குமார் நன்றியுரை பேசினார் .

ஆக நண்பர்களே விடை பெருவிழா என்பது பிரிவின் வருத்தமாக எடுத்துக்கொள்ளாமல் வாழ்வின் அடுத்தக் கட்டத்திற்கு செல்லும் பாதை என்று எண்ணி வாழ்த்தி தலைமை நண்பர்களோடு எப்போதும் இருங்கள் .



பிரிவு பற்றி என் அன்புத் தோழி எழுதிய கவிதை:

"எங்கோ பிறந்தோம்
இங்கே இணைந்தோம்
பிரிவதற்க்கெனவே
இணைந்தோம் .
கல்லுரி வாழ்வில்
கவலை ஏது?
சிறகில்லாமல்
பறந்தோம் .
வகுப்பில் பதிந்திருக்கும் நம்
உள்ளங்காலின் ரேகைகள்
யாராக இருந்தாலும் கிண்டல்
அடித்த நம் நினைவுகள்
ஆண்டுகள் இரண்டு நொடியைபோல
போனது எப்படி ?தெரியவில்லை
காலன் செய்த மாயம் .
இனிமேல் எங்கே
என்ன ஆவோம்
இந்த நிமிடம் தெரியவில்லை ?
சிரிக்கும்  காலம் முடிந்தது
இனிமேல்
           " வாழ்க்கை வேறு உணருங்கள்
             நம்மைப் பிரித்த காலன்
            அனுமதி தந்தால்
             மீண்டும் சந்திப்போம்
             விடைகொடுங்கள் "
இலக்கியம்
           "  பாரி
            வள்ளலாய் இருந்ததனால்
            முல்லைக்குத்
            தேர் கொடுத்திருக்கிறான்
            தோழனாய் இருந்திருந்தால்
            தோள் கொடுத்திருப்பான் ."......





ஆக பிரிவு உபசார விழாவைக் கொண்டாடுங்கள் நண்பர்களின் அன்பிலேயே

 எப்போதும் இருங்கள்  





                                                                                                    நன்றி .







Sunday, May 13, 2012

என் காதலிக்கு சொந்தம் .

என் காதலிக்கு சொந்தம் .

மருத்துவர் சொன்னார்

என் இதயத்தில்

ஓட்டை என்று !

பாவம் அவருக்கு

தெரியாது -

நீ வந்து போகும்

வாசல் என்று ....!"