Pages

Monday, December 19, 2011

கே.எஸ்.ஆர் இன் கல்விப் பணிகள்:

                                                                                                                                          முதல்பரிசுபெற்றேன் :

                           


கே.எஸ்.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லுரி:
                            






                            "   வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்
                                        
                                                   வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்"

எனச் சொன்னார் வள்ளுவர் ,இந்த இலக்கியத்துக்கு இலக்கணமாகத்

திகழ்ந்தவர் நம் கே.எஸ்.ஆர் .தான் கல்வியில் நான்கு படிகள் ஏறிவிட்டேன் 

எம் குழந்தைகள்  (மாணக்கர்கள் )பலப் படிகள் ஏற வேண்டும் என 

எண்ணியவர் புதியதோர் சமுதாயம் படைக்க  மாணாக்கர்களுக்கு  புத்துயிர் 

புகட்டுவது கே.எஸ்.ஆர். தூயஉள்ளமும் தொய்வில்லாத   பணியும் இவர்தம்

கண்கள்.அந்த வகையில் கல்விப் பணிக்கு இவர்  செய்ததே "வரலாற்றில்"

இடம் பெறுவதாக இருக்கும் .


 கே.எஸ்.ஆர் ஓர் அறிமுகம்: 



                      " சுயமுயற்சி" "சுயவளர்ச்சி "என்ற கொள்கை கொண்டு விளங்கும்

கொங்கு நாட்டைச் சேர்ந்த நம் கே.எஸ்.ஆர்  செங்கோடு ,நாகாசலம் ,உரகிரி,

 கொடிமாடச் செங்குன்றூர் ,என்றெலாம் புகழப்படும் தலமாக விளங்கும் ஓர் 

சிறப்பு பெற்ற முழுமுதற் கடவுளாக விளங்கும் "உமையம்மையோடு"

"அர்த்தநாரீஸ்வரர் "(சிவபெருமான் ) காட்சியளிக்கும் திருச்செங்கோடு  

வட்டத்தில் கருவேப்பம்பட்டி எனும் அழகிய கிராமத்தில் பிறந்து வாழ்ந்து 

வந்தார் .

     தான் படிப்பில் ஓர் மழைத்துளி அறிவு பெற்றிருந்ததால் தன் வட்டத்தில் ஓர் 

சிறந்த கல்லூரி இல்லையே என்ற குறையைப் போக்குவதற்காக  தான் 

பிறந்த ஊரோடு  ,தன் தந்தை ,தன் பெயர் ,மூன்றையும் சேர்த்து 1984 ம் ஆண்டு 

 கே.எஸ்.ஆர் தொழிற்க்கல்வியை முதன் முதலில் ஆரம்பித்தார் . ஒரு

கல்லூரியில் படிக்கின்ற படிப்பானது (தொழில் )வேலைவாய்ப்பு சார்ந்ததாக

இருக்க வேண்டும் என எண்ணினார் .இவ் எண்ணம் இவரின் கல்லூரிக்கு

சிறந்த பெருமையைத் தேடித் தந்தது .


                       இதனை

                                      கல்வியின் பணியால் ......

                                                           உலகம் வியந்தது

                                     கல்லூரியின் முன்னேற்றத்தைக் கண்டு ;

                                                           நாடு  வியந்தது

                               இளைஞர்களின் விழிப்புணர்ச்சியைக் கண்டு ;

                                                           ஆசிரியர் வியந்தது

                                      மாணவர்களின் ஆர்வத்தைக்கண்டு ;

                                                           மக்கள் வியந்தது

                                     கே.எஸ்.ஆர் இன் கல்விப் பணியைக் கண்டு .........

 எத்தனை  எத்தனை கல்லூரிகள் வந்தாலும் இனி கே.எஸ்.ஆர் போன்று ஓர்

கல்லூரி  உதயமாக !   அந்த அளவிற்கு  பல முன்னேற்றப் பணிகள் செய்து

இருக்கிறது .


இயலாதார்க்கு உதவுதல் :

           வறுமையுற்ற மக்களுக்கு வாழ்க்கையில் அமைதி இல்லை என்பதை

உணர்ந்தவர்  கே.எஸ்.ஆர் .கல்விக்கு பணம் இல்லை என்று வந்தோருக்கு

கல்வியை  அள்ளிக்  கொடுப்பதோடு ,பல உதவிகளையும் செய்து வருபவர்

கே.எஸ்.ஆர் அவர்கள்.அதோடு  கல்விக்கு சிறந்த ஆசானாக விளங்கும்

பேராசிரியர்களுக்கு பல நலத்திட்டங்களையும் உதவிகளையும் செய்து

கொடுக்கும் உள்ளம் கொண்டவர்  என்பதை விளக்கும் விதமாக



                        "மக்கள் பணியே மகேசன் பணி"  அவர்தான்  கே.எஸ்.ஆர். என்ற

வரிகளால் உணர்த்தலாம் .

வளர்ச்சிப் படிகள் :





               கே.எஸ்.ஆர் கல்லூரி  300 ஏக்கருக்கு மேல் பரப்பளவு கொண்டதாகவும்,

வளர்ச்சியில் 20,000 மாணாக்கர்களுக்கு மேல் கல்வி எனும் அறிவைக்கற்று

வருகின்றனர்.

                இக் கல்லூரியில் மொத்தம் 14 கல்வி நிறுவனங்கள் ,ஆசிரியர்

பெருமக்கள்  1000 க்கு மேலும் கல்விக் கற்றுக் கொடுக்கின்றனர் .


                 கல்லூரிக்கு இலவசப் பேருந்து வசதிகளுடன் 106  பேருந்துகளுக்கு

மேல் செயல்பட்டு வருகின்றது  .


 நூலகம்  :




            "அறிவுடைமையே அழியாத சிறந்த செல்வம் "எனவே அனைவருக்கும்

பயன்படுவது நூலகம் எனலாம் .அந்த வகையில் 75,000 புத்தகங்களுக்கு மேல்

கொண்ட  பெருமை நம் கே.எஸ்.ஆர் கல்லூரிக்கு உண்டு .


            இதோடு இல்லாமல் 6,000 க்கு மேல் குறுந்தகடுகள்  (CD க்களும் )

உண்டு.இப் பெரும் வசதிகள் எல்லாம் இக் கல்லூரியில் பயிலும்

மணாக்கர்களையே சாரும் .


விளையாட்டு :




        "மாலை முழுதும் விளையாட்டு "என்பதன் வரிகளுக்கு ஏற்ப

விளையாட்டு பயிற்சிகள் ,நீச்சல் குளம் ,உடற்பயிற்சி (ஜிம்) ,போன்ற பயிற்சி

வசதிகள் ஏராளம் கொண்டது இக் கல்லூரிக்கு சிறப்பு.


            நல்லதொரு அரசு வேலை விளையாட்டுத்துறையில்

பங்கேற்போருக்கு உண்டு என்பதை உணர்ந்த இக்கல்லுரி  பல

பதக்கங்களையும்  பெற்றுத்தந்துள்ளது .



விளையாட்டில் அரவம் காட்டும் இளைஞர்களைப் பற்றி


                               "முறுக்கேறிய

                                                        நரம்புகளை 

                                முதலாய்க் கொண்ட

                                                         முரட்டுக்காளை "            என்ற கவிரின்

வரிகளால் உணர்த்தலாம் .


                 


உடற்கல்வி இயக்குநருக்கு விருது :


                         விளையாட்டு அறிஞர் நவராஜ் செல்லய்யா அறக்கட்டளை

சார்பில் ஆண்டு தோறும் தமிழக அளவில் விளையாட்டுத் துறையில் சிறந்த

சாதனை படைத்தவர்களுக்கு உடற்கல்வி விருது வழங்கப்படுகிறது இந்த

ஆண்டிற்கான விருது கே.எஸ்.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லுரிக்கு

சென்னை கன்னிமார் அரங்கில் நடந்த விழாவில் உடற்கல்வி இயக்குநர் உயர்

திரு "மாதேஸ்வரன் "அவர்களுக்கு வழங்கப்பட்டது .


கல்லூரியில் ஓர் அற்புதம் "வலைப்பூ

                  கே.எஸ்.ஆர் கல்லூரியில் பயிலும் மாணக்கர்களின் வளர்ச்சியில்

 பல வலைப்பூ வரிசைகள் உலகமெங்கும் பரவலாகி பல சிறப்புகளை

 பெற்று வருகின்றன .

அவற்றில் பேராசிரியர்களின் வலைப்பூ முகவரிகள் :

http://www.gunathamizh.blogspot.in/வேர்களைத்தேடி ...
                        

 http://tamilchinna.blogspot.in/தமிழ் அருவி...

இன்னும் பல துறை வகையிலான ஆசிரியர்கள் தங்களின் தனித் 

திறமைகளை வலைப்பூக்களில் வெளிப்படுத்தி வருகின்றனர் .


மாணாக்கர் வலைப்பூ :

நல்லதொரு கல்லூரியின் வளர்ச்சிக்கு எங்கள் மாணாக்கர்களின்  

வலைப்பூக்கள் உதாரணம் :








கல்லூரியின் பெருமையை விளக்கும் விதமாக இக் கல்லூரியில் 

தமிழ்த்துறை விளங்குகிறது ...

அவற்றில் சிறப்புகள் சில :

                     விடியல் 

                      பொன்மாலைப்பொழுது 

                    கவியரங்கம் 

  கவிதை ,கட்டுரை ,பேச்சு ,போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன  

என்பது இக் கல்லூரிக்கு சிறந்த பெருமையைத் தேடித் தரும் என்பதில் 

ஐயமில்லை ....

 முதல் பரிசு :

இந்தக் கட்டுரை எழுதியதன் மூலம் எனக்கு முதல் பரிசு கிடைத்தது அதை 

விட நான் இக் கல்லூரியில் படித்தேன் என்பது எனக்குப் பெருமையாக 

உள்ளது .

பெருமதிப்பிற்குரிய கே .எஸ் .ஆர் .அய்யா அவர்களின் பொன் கைகளால் 

டாக்டர் .அப்துல் கலாம் அவர்களின் வாழ்கை வரலாறு .என்ற புத்தகத்தை 

பரிசாகப் பெற்றேன் .


பரிசு பெற்றப்போது எடுத்த புகைப்படம் ..




 


முடிவுரை :


            ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையிலும் 

நான்முன்னேறிக்கொண்டு   இருக்கிறேன் என்ற வாசகத்தை மாணாக்கர்கள்

மனதில் பெருமைப் படுத்துவது கே.எஸ்.ஆர் கல்லுரி .கடவுள் வடிவமான

 அர்த்தநாரீஸ்வரர் சிறப்பைக் கொண்டு இவரைக் குறிப்பிடும் விதமாக

கவிஞர்

தன் பாடல்களில் 

                       "ஒருவன் எனச்  சொல்லவும் 

                                      ஒருத்தி எனச் சொல்லவும் 

                        முடியாத உன் வரவினை  

                                         திருசெங்கோட்டிலே 
 
                         உயர் மலையில் காணலாம் .."


                    தொடங்குக பணியை தொடங்குக அறத்தை 
                           
                                       கடலிலும் வானிலும்  கவினுறு நிலத்தினும் -பாரதிதாசன் 

பாடலுக்கு ஏற்ப கல்விப்பணியைத் தொடங்கிய இவர் பணிகள் தன் வளர்க 

இவர் தம் கல்விப்பணிகள் ,வாழ்க கே.எஸ்.ஆர்  அவர்கள், மக்கள் உம்மைப் 

பேரன்போடு வாழ்த்தட்டும் .



                                                                                     நன்றி

இந்தக் கட்டுரையில் பிழை இருப்பின் மன்னிக்கவும் .















 

































                                                        


                                      










 







கொடிமாடச் செங்குன்றூர்,என்றெலாம்

கொடிமாடச் செங்குன்றூர்

Monday, November 21, 2011

தெரிஞ்சுக்குங்க ..........!

தெரிஞ்சுக்குங்க ..........!





தேசிய விலங்கு: புலி










தேசிய பறவை:மயில்








தேசிய மலர்:தாமரை





தேசிய மரம்:ஆலமரம்









தேசியக்கனி :    மாம்பழம்











  தேசிய விளையாட்டு :ஹாக்கி









தேசியப்பாடல்




தமிழாக்கம்:

தாயே வணங்குகிறோம்

இனிய நீர்
இன்சுவைக்கனிகள்
தென்திசைக் காற்றின் தெள்ளிய தண்மை
மரகதப் பச்சை வயல்களின் மாட்சிமை
எங்கள் தாய்
தாயே வணங்குகிறோம்


வெண்ணிலவின் ஒளியில் பூரித்திடும் இரவுகள்
இதழ் விரித்தெழும் நறுமலர்கள் சொரியும் மரக்கூட்டங்கள்
எழில்மிகு புன்னகை
இனிமை ததும்பும் ஏற்றமிகு மொழிகள்
எங்கள் தாய்
சுகமளிப்பவளே
வரமருள்பவளே
தாயே வணங்குகிறோம்

கோடிக் கோடிக் குரல்கள்
உன் திருப்பெயர் முழங்கவும்
கோடிக் கோடிக் கரங்கள்
உன் காலடிக்கீழ் வாளேந்தி நிற்கவும்
அம்மா ! 'அபலா '#2 என்று உன்னை அழைப்பவர் எவர் ?
பேராற்றல் பெற்றவள்
பேறு தருபவள்
பகைவர் படைகளைப் பொசுக்கி அழிப்பவள்
எங்கள் தாய்
தாயே வணங்குகிறோம்

அறிவு நீ
அறம் நீ
இதயம் நீ
உணர்வும் நீ
எம் தோள்களில் பொங்கும் சக்தி நீ
எம் உள்ளத்தில் தங்கும் பக்தி நீ
எம் ஆலயம் எங்கும் ஆராதனை பெறும்
தெய்வச் சிலைகளில் திகழும் ஒளி நீ
தாயே வணங்குகிறோம்

ஆயுதப் படைகள் கரங்களில் அணிசெய்யும்
அன்னை துர்க்கை நீயே
செங்கமல மலர் இதழ்களில் உறையும்
செல்வத் திருமகள் நீயே
கல்வித் திறம் அருள் கலைமகளும் நீயே
தாயே வணங்குகிறோம்

திருமகளே
மாசற்ற பண்புகளின் மனையகமே
ஒப்புயர்வற்ற எம் தாயகமே
இனிய நீரும் இன்சுவைக் கனிகளும் நிறையும் எம் அகமே
கருமை அழகியே
எளிமை இலங்கும் ஏந்திழையே
புன்முறுவல் பூத்தவளே
பொன் அணிகள் பூண்டவளே
பெற்று வளர்த்தவளே
பெருமைகள் அனைத்தும் அளித்தவளே
தாயே வணங்குகிறோம்


Friday, October 28, 2011

உருகிய காதல்....

உருகிய காதல்....


காதலித்துப் பார்!

கவிதையின் வார்த்தை வரும் .

காதலிக்க பெண் வருவாளா...?

காதல் கஷ்டம் தான்.
 
கவிதையாக மலரும் என்றால் 

மலரட்டும் .

என் எதிர்காலமே கனவு 
என் காதல் சேரும் போது.

எதிர் கால வாழ்க்கையும் 

சேறாகும்.
இடையில் நின்றுப் பார்ப்பாள்

பார்த்தால் இடையே தெரியாது 

மகிழ்ச்சியாக பேசுவாள் -மறு 

பிறவியில் சேர்ந்து வாழலாமென்று .


சாந்தமாக பேசுவாள் 



சந்தன மணம் வீசமட்டாள்

மொட்டாய் இருப்பாள்

பூவாய் மலரமட்டாள்.

காயாய் இருப்பாள் 

கனியாக மாட்டாள் 

கன்னியாக இருப்பாள் 

காதலிக்க மாட்டாள் ..

அழகாய் இருப்பாள் 
 ஆசைப்பட மாட்டாள் .

காதலித்துப்   பார்  !
கஷ்டம் வரும் ..

பி 

ன்

பு 

தா 

ன் 

கவிதையின்  வார்த்தை வரும் .....


இந்தக் கவிதையின்  மூலம் ஒன்றை 

உணர வேண்டும் ..



காதல் உண்மை தான் ஆனால்

காதலி பொய் .   என்பது புரிகிறது .

நான் சொல்வது ..

 

காதலிப்பது தவறில்லை 

காதலித்த பெண்ணை கை விடுவது தான்  தவறு ..



                                                                                                நன்றி.




































































Tuesday, October 18, 2011

பார்க்க..... ரசிக்க ....

பார்க்க..... ரசிக்க ....















































































bye bye bye   ................................................



Tuesday, October 4, 2011

சரஸ்வதி பூஜை ஆயுதபூஜை வாழ்த்துக்கள் .............

சரஸ்வதி பூஜை ஆயுதபூஜை  வாழ்த்துக்கள்   .............




கல்வி தரும் கலைமகள்

 
கல்வி தரும் கலைமகள்
"வெள்ளை தாமரை பூவிலிருப்பாள்
வீணை செய்யும் ஒலியிலிருப்பாள்
கொள்ளை யின்பங் குலவு கவிதை
கூறு பாவலன் உன்னத் திருப்பல் " ---- மகாகவி பாரதியார்

                                                                                                                                                                          அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் ஆயுதபூஜை வாழ்த்துக்கள்பா.


நாளை 

சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வருகிறது.படிக்கும் போது புத்தகங்கள்

வைத்து பெற்றோருடன் கொண்டாடிய சரஸ்வதி பூஜை ஒரு ஜாலி தான்.

அதே மாதிரி நம் அன்றாட வாழ்வில் பயனபடுத்தபடும் ஆயுதங்களுக்கும் பூஜை செய்வோம்

.தெருவில் கடைகள் முழுக்க சந்தன வாசனையோடு கடை

அலங்காரத்தோடு கலைக்க்கட்டி இருக்கும்.

அய் ஜாலி தான்



குறிப்பாக ...

கல்வி பயிலும் மாணவர்கள் கண்டிப்பாகக் இன் நன்னாளில் புத்தகங்களை வைத்து வணங்கி  அன்றைய தினம் ஒரு பத்து வரிகளாவது மனப்பாடம் செய்ய வேண்டும்


  எல்லா வளமும் பெற்று கல்வியால் வளர்ச்சி பெற்று இறைவனது

அருள்பெற அமுதம் தமிழ் வாழ்த்துகிறது ...


மறுபடியும் வாழ்த்துக்கள்

Thursday, April 21, 2011

10ம் வகுப்பு பாடப்புத்தகம் இணையதளத்தில் வெளியீடு


10ம் வகுப்பு பாடப்புத்தகம் இணையதளத்தில் வெளியீடு

 




















சென்னை : சமச்சீர் கல்விக்கான 10ம் வகுப்பு 

பாடப்புத்தகம் இன்று

இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு ஆங்கில மற்றும் தமிழ்

வழி பாட புத்தகங்கள் 

வெளியிடப்பட்டுள்ளது. www.pallikalvi.in என்ற 

இணையதளத்தில் 10ம் வகுப்பு பாட புத்தகங்களை 

காணலாம். இத்தகவலை 

தமிழக பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.


நல்ல மதிப்பெண்கள் பெற அன்பு மாணவர்களுக்கு 

வாழ்த்துக்கள் .... 

Wednesday, April 20, 2011

கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள்



கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.ஆயுள் முழுவதும் மாறாதது எது ?
                                                                      
                                                                   பதில்-ரத்தவகை

2.பெல்ஜிய விமான சர்வீஸின் பெயர் என்ன ?

                                                                    பதில்-சபீனா

3.பிராகிருதமும் தமிழும் கலந்த மொழி எது ?



                                                                    பதில்-தெலுங்கு மொழி

4.குதுப்மினார் கோவிலின் நிழல் விழாத நாள் எது ?

                                                               பதில்-  ஜீலை 20                                                                                                                



5.காசி ராங்கோ என்னும் சரணாலயம் எங்குள்ளது ?

                                 பதில்-அஸ்ஸாம் மாநிலத்தில்


6.சுந்தரவனக்காடுகள் காணப்படும் இடம் எது ?  

                                                     பதில்-கங்கை டெல்டா பகுதி

7.ஓரிசாவில் மீன்பிடிப்பு பகுதியாக விளங்குவது எது ?

                                                                   பதில்-.சில்கா ஏரி

8.சணலின் சிறப்புப் பெயர் என்ன ?
 
                                                                பதில்-தங்க இழை

9.இந்தியாவில் கரும்பு அதிக அளவில் பயிரிடப்படும்
  மாநிலம் எது ?
                                                               பதில்-உத்திரப்பிரதேசம்,

10.ஆக்டோபஸிக்கு எத்தனை இதயங்கள் ?

                                         பதில்- மூன்று.
                                                              










Wednesday, March 30, 2011

சிறுகதைப் பரிசு ..

  0/0 

தனித்தமிழ்ச் சிறுகதைப்போட்டி 

கதைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 10.6.2011
வந்து சேரவேண்டிய முகவரி :தலைவர் தனித்தமிழ் இயக்கம்,
66,மாரியம்மன்கோவில் தெரு, தட்டாஞ்சாவடி,புதுச்சேரி-9
 
*போட்டிக்கான நெறிமுறைகள்:

1. 5 பக்கங்கள் அளவில் மிகாத குமுகாயக் கதைகளை மட்டும்
அனுப்புக.
2.தாளின் ஒரு பக்கம் மட்டும் எழுதுதல் வேண்டும்.தாளின்
பின்பக்கத்திலோ முன்பக்கத்திலோ பெயரோ முகவரியோ
முத்திரையோ இருக்கக் கூடாது.
3.கதையின் மேல் தனித்தாளில் எழுதியவர் பெயரையும் கதையின்
பெயரையும் இணைத்து அனுப்புக.
4.கதையின் இரு படிகளைக் கட்டாயம் அனுப்புக.
5.ஆங்கிலம்,வடமொழிமுதலிய பிறமொழிச் சொற்களையோ பெயர்
களையோ கலக்காமல் தனித்தமிழில் கதைகள் அமைதல் வேண்டும்.
6.கதைக்கேற்ற ஓவியங்களை அனுப்பலாம்.
7.ஒருவர் பல கதைகளை அனுப்பலாம்.
8.கதைகளை நூலாக்கும் உரிமை,பதிப்பிக்கும் உரிமை
ஆகியவற்றுக்குத் தனித்தாளில் ஒப்புதல் தருக.
9.இப்போட்டி 12 ஆவது ஆண்டாக நடைபெறுகிறது.கதைகள்
வெல்லும்தூயதமிழ் மாதஇதழில் தொகுப்பாக வெளியிடப்படும்.
தனித்தொகுப்பாகவும் வெளியிட முயல்வோம். அதன் முழு உரிமை
இயக்கத் தலைவர்க்கு உரியதாகும். முழுமையான நெறிமுறைகள்
1.7.2011 வெல்லும் தூயதமிழில் முடிவுகள் வெளிவரும்.
 
பரிசுகள் விபரம் :
 
. முதற்பரிசு உருவா 1000.00
இரண்டாம் பரிசு உருவா 500.00
மூன்றாம் பரிசு உருவா 250.௦௦
 
பரிசுகளை வழங்குபவர் எழுத்தாளர் 
 
எழுத்தாளர் இரா.தேவதாசு, புதுச்சேரி.
-முனைவர் க.தமிழமல்லன், தலைவர்,தனித்தமிழ் இயக்கம்.

தொடர்பு எண்கள் : 
0413-2247072, 97916 29979ல் வெளியிடவும்

Saturday, March 12, 2011

ஒரேழுத்து ஒரு மொழி பொருள்...........

ஒரேழுத்து ஒரு மொழி பொருள்...........




                 தமிழ் மொழியில் மொத்தம் 246  எழுத்துக்களில் 42  எழுத்துகளுக்கு தனியே பொருள் உண்டு .
   
        அவற்றில் சில  :


             VAO போன்றத் தேர்வுகளில்  இவை கேட்கப்படலாம் :

      
        ஆ -   பசு 

        ஈ -    பறக்கும்பூச்சி

        ஊ -உணவு 

        ஏ-அம்பு 

       ஐ -அழகு ,தலைவன் 

        ஓ-மகிழ்ச்சி 

  மேலும் 
  ம- வின் மா , மீ , மு , மே,மை ,மோ.. பற்றியது

         மா -அழகு ,மேன்மை 
      மீ -மேலே ,உயர்வு 

      மூ -மூப்பு (முதுமை ),மூன்று 

      மே-அன்பு ,மேம்பாடு 

      மை -அஞ்சனம் (கண்மை ),எழுதுமை 

       மோ-முகர்தல்  

       
  த- வின்  இனம் தா,தீ ,தூ,தே,தை  பற்றியது

         தா -கொடு ,அழிவு, தாண்டு

         தீ -நெருப்பு 
     
         தூ -தூய்மை ,பகை 

         தே -கடவுள் 

          தை -தமிழ் மாதம்


ப  -வின் இனம்  பா ,பூ,பே ,பை ,போ, பற்றியது

          பா -அழகு ,பாட்டு

        பூ-மலர் ,புவி 
       பே -நுரை ,அக்கம் 

       பை -கொள்கலம் ,இளமை 

       போ-செல் 

ந -வின் இனம் நா ,நீ ,நே ,நை ,நோ, பற்றியது

      நா -நாக்கு ,அயலார் 

     நீ -நீ (முன்னிலை )

      நை -வருந்து 

     நோ -நோய் ,துன்பம் 

    

க -வின் இனம் கா,கூ, கை,கோ பற்றியது

      கா -சோலை 

      கூ-பூமி 

      கை -உறுப்பு 
     கோ -வேந்தன் 

வ -வின் இனம் வா ,வீ ,வை ,வௌ பற்றியது

      வா -வருகை

      வீ -மலர் ,விரும்புதல் 
      வை -வைத்தல் ,வைதல்

       வௌ -வவ்வுதல் ,

ச -வின் இனம்  சா ,சீ,சே ,சோ பற்றியது 

        சா -சாதல் ,சோர்தல் 

        சீ -வெருப்புச்சொல்  ,சீத்தல் 

        சே-காளைமாடு ,சிவப்பு 

       சோ -மதில் ,நகல் 


என்பனப் போன்று   பல  வகை உண்டு  தெரிந்து  பயன் பெறுங்கள்  ...........

                                                                                       
                                                                                                     நன்றி