Pages

Wednesday, March 30, 2011

சிறுகதைப் பரிசு ..

  0/0 

தனித்தமிழ்ச் சிறுகதைப்போட்டி 

கதைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 10.6.2011
வந்து சேரவேண்டிய முகவரி :தலைவர் தனித்தமிழ் இயக்கம்,
66,மாரியம்மன்கோவில் தெரு, தட்டாஞ்சாவடி,புதுச்சேரி-9
 
*போட்டிக்கான நெறிமுறைகள்:

1. 5 பக்கங்கள் அளவில் மிகாத குமுகாயக் கதைகளை மட்டும்
அனுப்புக.
2.தாளின் ஒரு பக்கம் மட்டும் எழுதுதல் வேண்டும்.தாளின்
பின்பக்கத்திலோ முன்பக்கத்திலோ பெயரோ முகவரியோ
முத்திரையோ இருக்கக் கூடாது.
3.கதையின் மேல் தனித்தாளில் எழுதியவர் பெயரையும் கதையின்
பெயரையும் இணைத்து அனுப்புக.
4.கதையின் இரு படிகளைக் கட்டாயம் அனுப்புக.
5.ஆங்கிலம்,வடமொழிமுதலிய பிறமொழிச் சொற்களையோ பெயர்
களையோ கலக்காமல் தனித்தமிழில் கதைகள் அமைதல் வேண்டும்.
6.கதைக்கேற்ற ஓவியங்களை அனுப்பலாம்.
7.ஒருவர் பல கதைகளை அனுப்பலாம்.
8.கதைகளை நூலாக்கும் உரிமை,பதிப்பிக்கும் உரிமை
ஆகியவற்றுக்குத் தனித்தாளில் ஒப்புதல் தருக.
9.இப்போட்டி 12 ஆவது ஆண்டாக நடைபெறுகிறது.கதைகள்
வெல்லும்தூயதமிழ் மாதஇதழில் தொகுப்பாக வெளியிடப்படும்.
தனித்தொகுப்பாகவும் வெளியிட முயல்வோம். அதன் முழு உரிமை
இயக்கத் தலைவர்க்கு உரியதாகும். முழுமையான நெறிமுறைகள்
1.7.2011 வெல்லும் தூயதமிழில் முடிவுகள் வெளிவரும்.
 
பரிசுகள் விபரம் :
 
. முதற்பரிசு உருவா 1000.00
இரண்டாம் பரிசு உருவா 500.00
மூன்றாம் பரிசு உருவா 250.௦௦
 
பரிசுகளை வழங்குபவர் எழுத்தாளர் 
 
எழுத்தாளர் இரா.தேவதாசு, புதுச்சேரி.
-முனைவர் க.தமிழமல்லன், தலைவர்,தனித்தமிழ் இயக்கம்.

தொடர்பு எண்கள் : 
0413-2247072, 97916 29979ல் வெளியிடவும்

Saturday, March 12, 2011

ஒரேழுத்து ஒரு மொழி பொருள்...........

ஒரேழுத்து ஒரு மொழி பொருள்...........




                 தமிழ் மொழியில் மொத்தம் 246  எழுத்துக்களில் 42  எழுத்துகளுக்கு தனியே பொருள் உண்டு .
   
        அவற்றில் சில  :


             VAO போன்றத் தேர்வுகளில்  இவை கேட்கப்படலாம் :

      
        ஆ -   பசு 

        ஈ -    பறக்கும்பூச்சி

        ஊ -உணவு 

        ஏ-அம்பு 

       ஐ -அழகு ,தலைவன் 

        ஓ-மகிழ்ச்சி 

  மேலும் 
  ம- வின் மா , மீ , மு , மே,மை ,மோ.. பற்றியது

         மா -அழகு ,மேன்மை 
      மீ -மேலே ,உயர்வு 

      மூ -மூப்பு (முதுமை ),மூன்று 

      மே-அன்பு ,மேம்பாடு 

      மை -அஞ்சனம் (கண்மை ),எழுதுமை 

       மோ-முகர்தல்  

       
  த- வின்  இனம் தா,தீ ,தூ,தே,தை  பற்றியது

         தா -கொடு ,அழிவு, தாண்டு

         தீ -நெருப்பு 
     
         தூ -தூய்மை ,பகை 

         தே -கடவுள் 

          தை -தமிழ் மாதம்


ப  -வின் இனம்  பா ,பூ,பே ,பை ,போ, பற்றியது

          பா -அழகு ,பாட்டு

        பூ-மலர் ,புவி 
       பே -நுரை ,அக்கம் 

       பை -கொள்கலம் ,இளமை 

       போ-செல் 

ந -வின் இனம் நா ,நீ ,நே ,நை ,நோ, பற்றியது

      நா -நாக்கு ,அயலார் 

     நீ -நீ (முன்னிலை )

      நை -வருந்து 

     நோ -நோய் ,துன்பம் 

    

க -வின் இனம் கா,கூ, கை,கோ பற்றியது

      கா -சோலை 

      கூ-பூமி 

      கை -உறுப்பு 
     கோ -வேந்தன் 

வ -வின் இனம் வா ,வீ ,வை ,வௌ பற்றியது

      வா -வருகை

      வீ -மலர் ,விரும்புதல் 
      வை -வைத்தல் ,வைதல்

       வௌ -வவ்வுதல் ,

ச -வின் இனம்  சா ,சீ,சே ,சோ பற்றியது 

        சா -சாதல் ,சோர்தல் 

        சீ -வெருப்புச்சொல்  ,சீத்தல் 

        சே-காளைமாடு ,சிவப்பு 

       சோ -மதில் ,நகல் 


என்பனப் போன்று   பல  வகை உண்டு  தெரிந்து  பயன் பெறுங்கள்  ...........

                                                                                       
                                                                                                     நன்றி

    
        


        

        

      
         

Saturday, March 5, 2011

நீங்கள் காதலிக்கிறீங்களா...............?

நீங்கள் காதலிக்கிறீங்களா...............?


















எது உண்மையானக்காதல்  என்று  உங்களுக்கு தெரியுமா .......?


சரி காதல் பற்றின சிந்தனைகள் மூலம் சில கவிதைகள் பார்ப்போம்..




                     


ஒருகவிஞன் காதலைப்பற்றி குறிப்பிடும் போது .....

                 காதல் என்பது 
            கைத் துடைக்கும் 
            காகிதம்  போன்றது     என்கிறார் ......

இனொருவர் காதலில் பெண்கள்தான் ஏமாற்றுகிறார்கள்  என்கிறார்


                 காதலுக்கு  கண்ணில்லை
                 அது அன்று !
                 காதலிக்க  உண்மையான
                 பெண்ணில்லை!  
                 அது இன்று ...

இதை விடுங்க காதல் ஒருவர் வாழ்க்கையோடு  ஒப்பிடும் போது ..

                        கட்டாயம்  காதல்  செய்யுங்கள்
                ஏனெனில்  சந்தோசம் மட்டும்
                வாழ்க்கையல்ல ..


இந்தக்  காதலையே  உயிருடன்  ஒருவர் குறிப்பிடும்போது!


                          ஒரு வார்த்தையில்               
                  உயிர் வாழ்வதும் !
                  ஒருவார்த்தைக்காக                      

                  உயிர் வாழ்வதும்
                  காதலில் மட்டும் தான் .   என்கிறார்
   



ஆப்பு எல்லோருக்கும் உண்டு .
காதலில்  ஆப்பு  எப்படி  வரும்  என்றுத்  தெரியுமா ?

 பாருங்கள்...

                     தினம் ஒரு பூ கொடுத்தேன்  
              அவளுக்கு -அவள்
              ஒரே பூ கொடுத்தாள்
              எனக்கு  அதான்    
              ஆப்பு ..

இன்னும் சற்றுத்  தேடிப்பார்த்தால்  காதலுக்காக இதயத்தையே 

இரும்பென்கிறார்கள்   ..

                      உன் கண்கள் என்னும்
                காந்தத்தால்  என்னை
                கட்டி இருந்தாய் -பின்னர்
                தான் தெரிந்தது -உன் இதயம்
                இரும்பென்று . 
                                
மேலும் காதலிப்பவர்கள் சிலர் காதலியிடம் காதல்  கடிதம்  கொடுத்தால்

என்ன நடந்தது  என்று பாருங்கள் .
       
                     அவளை நினைத்து -கவிதை
               எழுதி  அவளிடம்  கொடுத்தேன்
               படித்து விட்டு  கேட்டா பாரு !
               ஒரு கேள்வி  அண்ணா யாரையாவது
               லவ்  பன்றீங்களா.........என்று ?

 இன்னும் கொஞ்சம்  சொல்லப் போனால்  கெட்டவன் போல்
 யார் நடிக்கிறார்களோ  அவர்களுக்குத்தான்   காதல்  ஜெயிக்குமம்
 நல்லவனுக்கு காதல் ஜெயிப்பது  மிகவும் குறைவுதான் .


          இதற்கு  இந்த கவிதை சான்று ..

                    ஏனோ என்னை  விரும்ப -அவளுக்கு
              விருப்பம் இல்லை !
              பிடிக்காததால் அல்ல !
              நான் நல்லவன்  போல்
              நடிக்காததால்.

   சரிங்க காதலைப்பத்தி  சொன்னா இப்படியே சொல்லிகிட்டுதான் 
   இருக்கணும் .   ...    

 உண்மையான  காதலுக்கு  எனக்கு  ஒரு செல்லிடைபேசி  குட்டிக் கதை 
வந்துச்சி  கதையப் படிச்சித்  தெரிஞ்சிக்கோங்க ...
                
                உண்மையானக்  காதல்

          ஒருத்தன்  ஒரு கண்ணுத்தெரியாத
          பெண்ணைக்  காதலித்தான்  ..
           என்னைக் கை விடமாட்டியேனு  
          அவ கேட்டா கண்டீப்பா உன்ன         
           கல்யாணம் பண்ணிக்கிறேனு
          அவன் சத்தியம் செய்தான் ..
          அவளுக்கு  கண்  ஆபிரேசன் நடந்துச்சி
          கண் தெரிஞ்சுச்சி .-அவளுக்கு 
         அப்போதான் தெரிஞ்சுச்சி -அவனுக்கும்  
          கண் தெரியாதுன்னு! அதனால 
          அவ கல்யாணம்  பண்ணிக்க  முடியாதுன்னு 
          சொல்லிட்டாள் ...........
          அவன்  கொஞ்ச  தூரம் போய்

           திரும்பி   அவக்கிட்ட  ஒன்னு  சொன்னான் 



                        என் கண்ணை  பத்திரமா  பாத்துக்கோ ......
          
ஆக நண்பர்களே  காதலிக்க கூடாதுனு சொல்லலை  காதலுக்காக  சாகாதிங்க.

               காதலுக்காக சாகவும்  கூடாது காதலிக்காமல் 
           சாகவும்  கூடாது ..








  இதை கடைப் பிடித்து  உங்க வாழ்க்கைல  ஜெயித்துக் காட்டுங்க...


                         மீண்டும்  நல்ல காதலோட  சந்திக்கிறேன் ....