Pages

Wednesday, April 13, 2022

சிறந்த ஞானியின் கனவு

 

சிறந்த ஞானியின் கனவுசிறுகதை

        

 அன்று இரவு முழுவதும் கண் விழித்துக் கொண்டு தன்காதலி கயல்விழி நினைவால் வாடிக்கொண்டிருந்தான் செல்வந்தரின் மகன் ஞானி.

 நேரம் ஓடிக் கொண்டே இருந்தது. கையில் ஒரு பெட்டியுடன் கண்களில் காதலியின் வரவை எதிர்பார்த்தும், வாசலின்தூரத்தை, தன்தூக்கத்தைமறந்தும் பார்த்துக் கொண்டிருக்கிறான் அவன்.

 வெகுதூரத்தில் இருந்து நாய்கள் சத்தம் வெளவ், வெளவ்….. என்று அவன் காதுகளில் கேட்கிறது...

  ஓ! தன் காதலிதான் வருகிறாள் ஓடிவிடலாம் என நினைக்கிறான்.அவனது  பார்வை ரோட்டையே பார்த்தபடி இருந்தது.

 ஊர்க்காவலன் சைக்கிளில் வந்து கொண்டிருந்தான்.

ஞானியின் மனம் வாடியது

 எங்கே தன்காதலி வரமாட்டாளோ? என்ற எண்ணம் மனதில் ஒருபுறம் தோன்றியபடி இருந்தாலும் தன்காதலி தனக்கு துரோகம் செய்யமாட்டாள் என்பது ஞானிக்குத் தெரியும்.

 சற்றுநேரம் கழித்து கொலுசு சத்தம் சல,சல எனக் கேட்டது. அருகில் தன்காதலி பெட்டியுடன் வந்தாள் இருவரும் விடிவதற்குள் தன் ஊரைவிட்டு வெளியூருக்கு செல்ல முடிவெடுத்தனர்.

 யாருடைய மகன் என்று தெரிந்ததால் அவனுக்கு அங்கு தங்க வீடு கிடைத்தது.

 விடிந்தது, சில்லென்று குளிர்ஞானி தன் போர்வையை மூடியபடியே கண்விழித்துப் பார்க்கிறான்.

 வீட்டின் கதவுதட்டும் சத்தம் மெதுவாக கேட்க வீட்டின் உரிமையாளர்தான் தட்டுகிறார் என நினைத்து கதவைத் திறக்க நினைக்கயில் வெளியே ஒருபெரும் கூட்டம் இருப்பதுபோல் சத்தம் கேட்டது ஞானியின் காதுக்கு.

 கதவை திறக்கிறார் ஞானிக்கு ஒர் அதிர்ச்சி! வெளியே தன்தந்தையும், உறவினர்களும் நிற்கின்றனர்.

 அவ்வூரின் தலைவர் தன்தந்தைக்குத் தகவல் கொடுத்து விட்டார் என்பதை யூகிக்க அவனுக்கு அதிகநேரம் ஆகவில்லை...

 அவன் தந்தையோ தனக்கு ஒரே மகன் என்பதால் இருவரையும் சேர்த்து வைக்க முடிவு செய்கிறார்.

 ஓர் நந்நாளில் திருமணம் பெரியோர்கள் ஆசியுடன் இனிதே நடந்தது.

 நாட்கள் கழிந்தன. ஞானிக்கு ஓர் அழகிய குழந்தை ஒன்று பிறந்தது.

 தங்கள் செல்வத்தைக் காட்டிலும் அக் குழந்தையிடம் காட்டிய அன்பு அக்குடும்பத்தில் அதிகம் காணப்பட்டது.

 வீட்டின் வெளியே அய்யா, அய்யா..என்ற சத்தம்

 யாரது என்றபடி வெளியே வந்த கயல்விழி கண்ணீர் மழையில் நனைகிறாள். ஆழ்ந்த சந்தோசத்துடன் தன்தாய், தந்தையைப் பார்க்கிறாள்.

 இதற்கிடையில் செல்வந்தர் மருமகளே! ஏம்மா மருமகளே.. எனக்கு காபி ஒன்னு போட்டுக் கொடும்மா என்கிறார்.

 எங்கே தன்தாய், தந்தை வந்திருக்கிறார்கள் என்பதை தெரிந்தால் மாமனார் கோபப்படுவாரோ என நினைத்து வேகமாக உள்ளே செல்கிறாள் படியில் டப்,டப்என்று சத்தம் பார்த்தால் மாமனார் கீழே வந்து விட்டார்

 என்னாச்சிமா! ஏ! இப்படி ஓடி வர யாரு வந்திருக்காங்க? என்றபடி வெளியே பார்க்கிறார் கண்ணீருடன் வெளியே இருந்தவர்களைப் பார்த்தவுடன் அவர்கள் யார் என்று தெரிந்துகொண்டார்..

 உள்ளே வாருங்கள் என்று சொன்னவுடன் கயல்விழிக்கு பயம் திடுக்கிட்டது. என்ன நடக்குமோ? என்று மனதுக்குள் புலம்பியவாறு சமையலறைக்குச் சென்றாள்.

 மாமனார் கயல்விழியைக் கூப்பிட்டு வந்தவர்களுக்கு தண்ணீர் கொடும்மா என்றார்..

 பயம் ஒருபக்கம் இருக்க! சந்தோசம் ஒருபக்கம் இருக்க! தண்ணீர் கொண்டு வருகிறாள்..

 அதற்குள் இருவரிடையே சமாதானம் ஆகி ஒன்றாகி விட்டார்கள். சந்தோசத்துடன் செய்ய வேண்டிய தன்பணிகளை அவ்ஏழைச் சம்மந்தி தன்னால் முடிந்த சீர்களைச் செய்து விட்டு வாழ்த்தி வீடுதிரும்பினார்..

 கயல்விழி கதவில் சாய்ந்தபடி தன்தாய், தந்தையைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அழாதம்மா என்றபடி மாமனார் உள்ளே அழைத்துச் செல்கிறார்.

 சோபாவில் அமரச்செய்து இப்படித்தான் என்றவாறு தன் கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறார் மாமனார். ஓரு பெரிய பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவள் உன் மாமியார் நான் ஒரு கூலித் தொழில் செய்யும் ஒருவரின் மகன்.

 சிறுவயதிலேயே வருமானம் இன்றி தன் தந்தை தொழிலான கூலித் தொழிலில் ஈடுபட்டேன்.

 ஒவ்வொரு நாளும் தொழிலுக்கு செல்லும் போது உன் மாமியாரை நான் சந்திப்பேன். எங்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது .

ஆனால், திருமணம் நடக்குமோ என்ற அச்சத்தில் நாங்கள் இருவரும் திருமணம் செய்து வந்து இங்கு வாழ்கிறோம்..

 உன் மாமியாரோடு வாழ்ந்த வாழ்க்கை என்னை இந்த அளவுக்கு செல்வந்தனாக்கியது என்று கூறிக் கொண்டிருக்கும் போது ஆபிசுக்கு செல்வதற்காக ஞானி படியில் இறங்கி வந்து கொண்டிருந்ததைப் பார்த்து சரிம்மா நீ போய் உன் கணவரை வழி அனுப்பி விடும்மா என்றார்.

 எல்லாம் நல்லதுக்குதான்னு நினைச்சி நீயும் நல்லபடியா வாழனும்மா, வாழ்ந்து காட்டனும்மா,என்றார் மாமனார்.

 நாட்கள் பல கழிந்தது. குழந்தை துள்ளிக் குதித்த காலம் அக்குழந்தைக்கு எதிர்பாராத விதமாக செல்வமிருந்தும் குணமாக்க முடியாத நோய் வந்து விடுகிறது.

 இதனால் அக்குழந்தை பலனின்றி இறந்து விடுகிறது.

 செல்வந்தர் வீட்டில் இடியும், மின்னலும் வெடித்ததைப்போல் கண்ணீர்மழை பொழிந்தது. ஆனால்,

ஞானி மட்டும் அழவில்லை

 வீடு முழுவதும் குண்டூசி சத்தம் இன்றி சோகத்தில் மூழ்கின வழக்கம் போல் ஆபிசுக்கு கிளம்புவதற்காக ஞானி கிளம்புகிறான்.

 கயல்விழி பார்கிறாள். கோபம் தலைக்கேறியது ஏன் இப்படி இருக்கிங்க? நம் குழந்தை நம்மை விட்டுப் போய்விட்டது என்ற வருத்தமே உங்களுக்கு இல்லையா? என்று கேட்டாள்.

 தன் சட்டை பொத்தானை போட்டவாறு அப்படியே சோபா பக்கம் நெருங்கிய ஞானி அமைதியான நிலையில் அமர்ந்தார்.

 மேல் மாடியில் இருந்த செல்வந்தர் படியில் இருந்தபடி பார்க்கிறார்.

 வீட்டின் கடிகாரமணி ஓசை டக்,டக் என்று கேட்கிறது. காலை 8 மணி ஆயிற்று. கீழே வந்து தனது மகன் ஞானி அருகே அமர்ந்தார்.

 தன் மகனின் வருத்தத்தை உணர்ந்த அவர் மெதுவாக அணைத்து கவலை வேண்டாம் என்றவாறு குறிப்பிடுகிறார்.

 இருந்தாலும் ஏன்? அழமாட்டிங்கிறாய் என்று கேட்டார்.

 மெதுவாக நிமிர்ந்த ஞானி, நம் குழந்தை துள்ளிக் குதித்த அன்று இரவு நான் ஒரு கனவு கண்டேன் என்றார்.

தன் கனவை சொல்ல ஆரம்பித்தார்

 கயல்விழியும் சற்று நிமிர்ந்து அமர்ந்தாள் விடியற்காலைப் பொழுதில் நான் கண்ட கனவில் உனக்கு இரட்டைக் குழந்தை பிறந்தது.

 அக்குழந்தையை கண்ட நான் அன்போடு கொஞ்சுவதற்காகப் பக்கத்தில்  சென்று தொட ஆரம்பித்தேன்.

 அப்போதுதான் நான் கதறல் சத்தம் கேட்டு நான் தூக்கம் கலைந்து எழுந்தேன்.

 நான் அந்த இரண்டு குழந்தைகளை நினைத்து அழுவதா? இல்லை நம்  குழந்தையை நினைத்து அழுவதா? என்றான்..

 செல்வந்தருக்கும், கயல்விழிக்கும் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகியது.

 அப்போது செல்வந்தர் எல்லாம் ஒரு கனவாக நினைத்து நாம் வாழத்தொடங்குவோம் என்றார்.

வழக்கம் போல் ஆபிசுக்கு சென்று விட்டார் ஞானி......