Pages

Friday, February 21, 2014

திருவள்ளுவரின் பார்வையில் காதலியின் கண்கள் ...

காதலில் மிகுந்த சுவை தரக்கூடியது  காதலியின் கண்கள் என்கிறார் வள்ளுவர் ..


         திருவள்ளுவர் காலத்தில் பெண்களும் 'சைட்' அடித்தார்கள் என்பதற்கு இக் குறள் சான்று ..

                        "கண்களவு  கொள்ளுஞ் சிறுநோக்கங் காமத்திற் 
                        செம்பாக மன்று பெரிது "     -குறள் 1091

காதலியை சந்திப்பது , அவளுக்காக காத்திருப்பது , அவளோடு பைக்கில் 
 ஊர்சுற்றுவது , அவளுக்கு பரிசு வாங்கித்தருவது , ஓடாத படத்துக்கு ஓரடிக்கட் போடுவது , ஒரே இளநியில் இரண்டு ஸ்ட்ரா போட்டு குடிப்பது , இப்படியெல்லாம் பல வகை இருந்தாலும் இது எல்லாவற்றையும் விட சிறந்தது என்று சைட் அடிக்கும் காதலியின் கண்களை வள்ளுவர் குறிப்பிடுகிறார்..

                     கண்களவு          =திருட்டுத்தனமாய் கண்ணால்
                    கொள்ளுஞ்         = பார்த்துக் கொள்ளும்
                    சிறு நோக்கங்    = சிறிய நோக்கம்
                    காமத்திற்             = காதலில்
                    செம்பாக மன்று = சரி பாதி
                    பெரிது                    =அதை விட பெரிது

காதலியானவள் திருட்டுத்தனமா லுக்கு விடுவது இருக்கு பாருங்க அதில் தான் காதலனுக்கு பெரிய சந்தோசம் .

"மச்சி பாரே அவ என்னை பாக்குறா என்பான் காதலன் "

கண்களவு கொள்ளுஞ் சிறு நோக்கங்  - கண்ணால் களவு கொள்ளுவார்களாம்

எதை என்றால் ?  காதலனின் மனதை ..

இந்த சிறு பார்வையே போதும் ஆண்கள் விழுந்து விடுவார்கள் ,இந்த பார்வையிலேயே இவ்வளவு களவாணித்தனம் இருக்குது என்றால் பெரு நோக்காய் இருந்தால் காதலன் கதி அதோ கதி தான்..

பெண்ணை விட இந்த உலகில் பெருமையானது எதுவுமில்லை என்பது வள்ளுவப்பெருமானின் கருத்து . 


                                                                                         நன்றி
  

                       








                                    







                        

No comments:

Post a Comment